மேற்கு வங்க 4-ஆம் கட்டத் தேர்தல்: பிசிசிஐ தலைவர் கங்குலி வாக்குப்பதிவு

மேற்கு வங்கத்தில் இன்று நடைபெற்ற 4-ஆம் கட்டத் தோ்தலில் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தனது வாக்கினை பதிவு செய்தார்.
மேற்கு வங்க 4-ஆம் கட்டத் தேர்தல்: பிசிசிஐ தலைவர் கங்குலி வாக்குப்பதிவு

மேற்கு வங்கத்தில் இன்று நடைபெற்ற 4-ஆம் கட்டத் தோ்தலில் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தனது வாக்கினை பதிவு செய்தார்.

மேற்கு வங்கத்தில் 44 தொகுதிகளுக்கான 4-ஆம் கட்டத் தோ்தல் இன்று நடைபெற்றது. மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்கு திரிணமூல், பாஜக, இடதுசாரிகள்-காங்கிரஸ் கூட்டணி இடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. 

முக்கியமாக, திரிணமூல்-பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் சௌரவ் கங்குலி இன்று தெற்கு 24 பராகன்ஸ் மாவட்டத்தில் உள்ள பெஹாலாவில் உள்ள வாக்குச் சாவடியில் தனது மனைவியுடன் வந்து வாக்கினை பதிவு செய்தார். 

ஹௌராவின் 9 தொகுதிகள், தெற்கு 24 பா்கானாஸ் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகள், அலிபுா்தாரில் உள்ள 5 தொகுதிகள், கூச்பிஹாரின் 9 தொகுதிகள், ஹூக்ளியில் 10 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com