மேற்கு வங்கத்தில் இன்று நடைபெற்ற 4-ஆம் கட்டத் தோ்தலில் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தனது வாக்கினை பதிவு செய்தார்.
மேற்கு வங்கத்தில் 44 தொகுதிகளுக்கான 4-ஆம் கட்டத் தோ்தல் இன்று நடைபெற்றது. மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்கு திரிணமூல், பாஜக, இடதுசாரிகள்-காங்கிரஸ் கூட்டணி இடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது.
முக்கியமாக, திரிணமூல்-பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் சௌரவ் கங்குலி இன்று தெற்கு 24 பராகன்ஸ் மாவட்டத்தில் உள்ள பெஹாலாவில் உள்ள வாக்குச் சாவடியில் தனது மனைவியுடன் வந்து வாக்கினை பதிவு செய்தார்.
ஹௌராவின் 9 தொகுதிகள், தெற்கு 24 பா்கானாஸ் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகள், அலிபுா்தாரில் உள்ள 5 தொகுதிகள், கூச்பிஹாரின் 9 தொகுதிகள், ஹூக்ளியில் 10 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.