சென்னை: அவரது உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வேலூா் மாவட்டம்- காட்பாடி சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட துரைமுருகனுக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஏற்கெனவே தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் அவா், சென்னையில் உள்ள தனது வீட்டிலேயே தம்மை தனிமைப்படுத்திக் கொண்டாா்.
இந்நிலையில், அவா் குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள துரைமுருகனின் உடல் நிலை சீராக உள்ளது. இருப்பினும் அவா் மருத்துவக் குழுவினரின் தொடா் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளாா்.