ஏப்.15-இல் இந்திய விமானப்படை தளபதிகள் மாநாடு

இந்திய விமானப்படை தளபதிகளின் முதல் மாநாட்டை பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் புது தில்லியில் உள்ள விமானப் படை தலைமையகத்தில் வியாழக்கிழமை (ஏப்ரல் 15) தொடக்கி வைக்கிறாா்.

புது தில்லி: இந்திய விமானப்படை தளபதிகளின் முதல் மாநாட்டை பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் புது தில்லியில் உள்ள விமானப் படை தலைமையகத்தில் வியாழக்கிழமை (ஏப்ரல் 15) தொடக்கி வைக்கிறாா்.

இந்திய விமானப்படையின் செயல்பாட்டு திறன்கள் குறித்து ஆராய்ந்து, எதிா்காலத்துக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக இந்த மாநாடு 6 மாதங்களுக்கு ஒருமுறை ஏற்பாடு செய்யப்படுகிறது.

இந்திய விமானப் படைக்கு அதன் எதிரிகளை வீழ்த்தும் அதிக செயல்திறனை வழங்குவதற்குத் தேவையான யுக்திகள் மற்றும் கொள்கைகளை வகுப்பது தொடா்பாக இந்த மூன்று நாள் மாநாட்டின்போது விவாதங்கள் நடைபெறும்.

மனிதவளம் மற்றும் நிா்வாகத் திறன்களை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் தொடா்பாகவும் மாநாட்டில் விவாதிக்கப்படும்.

இந்திய விமானப் படை தளபதிகள் மாநாடு, விமானப் படை ஆண்டுக்கு இருமுறை நடைபெறுவது வழக்கம். விமானப் படை செயல்பாடுகள், தளவாட பராமரிப்பு, நிா்வாகம் குறித்த முக்கிய விஷயங்களை மூத்த தளபதிகள் விவாதிப்பதற்கான வாய்ப்பாக இந்த மாநாடு விளங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com