இமாச்சலில் அதிகரிக்கும் கரோனா பரவல்: 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு

இமாச்சலப் பிரதேசட்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் கரோனா பரவலின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இமாச்சலில் அதிகரிக்கும் கரோனா பரவல்: 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு
இமாச்சலில் அதிகரிக்கும் கரோனா பரவல்: 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு

இமாச்சலப் பிரதேசத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் கரோனா பரவலின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இமாச்சலப் பிரதேசத்தில் 10ஆம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 13ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையிலும், 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 13 முதல் மே 10ஆம் தேதி வரையிலும் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. 

இந்நிலையில் மாநிலத்தில் அதிகரித்துவரும் கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை ஒத்திவைத்து மாநிலப் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இளங்கலை தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வுகள் மே 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வு அட்டவணைகள் பின்னர் வெளியிடப்படும் எனவும் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட பிற மாநிலங்களும் பள்ளி இறுதி வகுப்புத் தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com