குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தமிழ் புத்தாண்டு உலகம் முழுவதுமுள்ள தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் தமிழக மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
புத்தாண்டு பிறப்பு நாளில், தமிழ்நாட்டில் உள்ள நமது சகோதர, சகோதரிகளுக்கும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கும் நல் வாழ்த்துகள். இந்த புனித நாள் அனைவருக்கும், நல்ல ஆரோக்கியம், அமைதி மற்றும் வளத்தைக் கொண்டு வரட்டும் என்று பதிவிட்டுள்ளார்.