முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், மருத்துவ மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. முதுநிலை நீட் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
வரும் ஏப்.18ஆம் தேதி முதுநிலை நீட் தேர்வு நடைபெறவிருந்தது. இந்தநிலையில் கரோனா பரவல் அதிகரிப்பு காரணம் தற்போது முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.