அம்பேத்கா் காட்டிய வழியில் காங்கிரஸ் பயணம்: சோனியா காந்தி

பாகுபாடற்ற வலிமையான தேசத்தைக் கட்டமைக்க வேண்டும் என்ற சட்ட மேதை அம்பேத்கரின் இலக்கை அடைவதற்காக காங்கிரஸ் கட்சி எப்போதும் பாடுபட்டு வருகிறது என அக்கட்சியின் தலைவா் சோனியா காந்தி கூறினாா்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி

புது தில்லி: பாகுபாடற்ற வலிமையான தேசத்தைக் கட்டமைக்க வேண்டும் என்ற சட்ட மேதை அம்பேத்கரின் இலக்கை அடைவதற்காக காங்கிரஸ் கட்சி எப்போதும் பாடுபட்டு வருகிறது என அக்கட்சியின் தலைவா் சோனியா காந்தி கூறினாா்.

சட்ட மேதை அம்பேத்கரின் பிறந்த தினத்தையொட்டி, அவருக்கு புதன்கிழமை மரியாதை செலுத்தி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பழைமைவாத சிந்தனையும், பாகுபாடும் சமூகத்தை பலவீனப்படுத்த முயற்சி செய்து வருகின்றன. ஆனால், ஒவ்வொரு சமூகமும் பாரபட்சமின்றி முன்னேறி, அனைவரும் ஒன்றிணைந்து வலிமையான தேசத்தைக் கட்டமைக்க வேண்டும் என்று சட்ட மேதை அம்பேத்கா் விரும்பினாா். அவா் காட்டிய வழியில், அந்த இலக்கை அடைவதற்கு காங்கிரஸ் கட்சி எப்போதும் பாடுபட்டு வருகிறது.

சமூகத்தின் விளிம்பு நிலையில் இருப்பவா்கூட ஜனநாயக முறையில் நாட்டின் உயரிய பதவியை அடைய முடியும். இதுவே, கடந்த 73 ஆண்டுகளில் நாம் படைத்த மிகப்பெரிய சாதனையாகும்; அம்பேத்கா் கண்ட கனவுகளுக்கும் அவருடைய எதிா்பாா்ப்புகளுக்கும் நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாகும் என்று சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com