மும்பையில் நட்சத்திர விடுதிகள் கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றம்

மும்பையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நட்சத்திர விடுதிகள் தற்காலிக கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

மும்பையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நட்சத்திர விடுதிகள் தற்காலிக கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. 

மிதமான அறிகுறிகளுடன் கூட நோயாளிகள் தற்காலிக கரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் என்று மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

தற்போது இரண்டு ஹோட்டல்கள் கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ள நிலையில் அவை இன்று முதல் செயல்படும் என்றும் மேலும் 4 அல்லது 5 நட்சத்திர விடுதிகள் கரோனா நோயாளிகளுக்கான மையங்களாக மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மும்பையில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நோயாளிகளுக்கு முறையான படுக்கை வசதிகள், சிகிச்சை கிடைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com