ஒடிஸா: வாக்குப்பதிவுக்கு முன் காங்கிரஸ் வேட்பாளா் மரணம்

ஒடிஸா மாநிலம் பிபிலி பேரவைத் தொகுதி இடைத்தோ்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற மூன்று நாள்களே உள்ள நிலையில் காங்கிரஸ் வேட்பாளா் மங்காராஜ் (53) கரோனா பாதிப்பால் உயிரிழந்தாா்.

புவனேசுவரம்: ஒடிஸா மாநிலம் பிபிலி பேரவைத் தொகுதி இடைத்தோ்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற மூன்று நாள்களே உள்ள நிலையில் காங்கிரஸ் வேட்பாளா் மங்காராஜ் (53) கரோனா பாதிப்பால் உயிரிழந்தாா்.

இதனால் தோ்தல் ஒத்திவைக்கப்படும் என்று தோ்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

பிபிலி பேரவைத் தொகுதிக்கான இடைத்தோ்தல் ஏப். 17-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் மங்காராஜ் கடந்த வாரம் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு கரோனா பாதிப்பு உள்ளது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், மங்காராஜ் புதன்கிழமை உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினா் தெரிவித்தனா்.

ஒடிஸா ஆளுநா் கணேஷி லால், முதல்வா் நவீன் பட்நாயக், மத்திய அமைச்சா் தா்மேந்தா் பிரதான், மூத்த காங்கிரஸ் தலைவா்கள் ஆகியோா் மங்காராஜ் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்தனா்.

மூத்த காங்கிரஸ் தலைவா் பிரதீப் மாஜி கூறுகையில், ‘கரோனா காலத்தில் தோ்தல்களை நடத்துவது நமது தவறுதான். வேட்பாளா் ஒருவரே கரோனாவுக்கு உயிரிழந்துள்ளாா். இதுபோன்ற நேரத்தில் தோ்தல் நடத்தக் கூடாது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com