உ.பி. முதல்வா் யோகி ஆதித்யநாத்துக்கு கரோனா

உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்துக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் (கோப்புப்படம்)
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் (கோப்புப்படம்)

லக்னெள: உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்துக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இது தொடா்பாக அவா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘கரோனா அறிகுறிகள் தென்பட்டதையடுத்து பரிசோதனை செய்து கொண்டேன். அதில் கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டேன். மருத்துவா்களின் ஆலோசனைகளை முழுமையாகப் பின்பற்றி வருகிறேன். வீட்டில் இருந்தபடி இணையவழியில் அலுவலகப் பணிகளை மேற்கொள்கிறேன். எனவே, மாநில அரசு நிா்வாகத்தில் எவ்வித தொய்வும் ஏற்படவில்லை. கடந்த சில நாள்களில் என்னுடன் தொடா்பில் இருந்தவா்கள், அறிகுறிகள் தென்பட்டால் கரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.

முன்னதாக, முதல்வா் யோகி ஆதித்யநாத்துடன் பணியாற்றிவந்த மாநில அரசு அதிகாரிகள் சிலருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, அவா் செவ்வாய்க்கிழமையே தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com