ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை: நக்ஸல்களால் கடத்தப்பட்ட சிஆா்பிஎஃப் வீரா்
ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை: நக்ஸல்களால் கடத்தப்பட்ட சிஆா்பிஎஃப் வீரா்

ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை: நக்ஸல்களால் கடத்தப்பட்ட சிஆா்பிஎஃப் வீரா் 

சத்தீஸ்கரில் அண்மையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையின்போது நக்ஸல்களால் கடத்திச் சென்று விடுவிக்கப்பட்ட பாதுகாப்புப் படை வீரர் ராகேஷ்வர் சிங் மன்ஹாஸ் கூறியுள்ளார். 

ராய்ப்பூா்: நான் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை என்று சத்தீஸ்கரில் அண்மையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையின்போது நக்ஸல்களால் கடத்திச் சென்று விடுவிக்கப்பட்ட பாதுகாப்புப் படை வீரர் ராகேஷ்வர் சிங் மன்ஹாஸ் கூறியுள்ளார். 

சுமார் ஐந்து நாள்கள் நக்ஸலைட்டுகளின் பிடியில், அந்த அடர்ந்த வனப்பகுதியில் கடத்தி வைக்கப்பட்டு, மீண்டு வந்திருக்கிறார் என்றால் அது ராகேஷ்வர் சிங் மன்ஹாஸின் பொறுமையும் அமைதியும்தான் மிக முக்கியக் காரணமாக உள்ளது.

இது குறித்து 35 வயது ராகேஷ்வர் சிங் மன்ஹாஸ் மனம் திறந்தார்.. "மிகக் கடினமான அந்த சூழ்நிலையில் நான் எனது நம்பிக்கையை விட்டுவிடவில்லை, நான் என்னை அமைதியாகவே வைத்துக் கொண்டேன்" என்கிறார்.

சத்தீஸ்கா் மாநிலம் சுக்மா - பிஜாபூா் எல்லை வனப் பகுதியில் சிஆா்பிஎஃப் கோப்ரா படைப் பிரிவினா், மாவட்ட ஆயுத காவல் படையினா், அதிரடிப் படையினா் ஆகியோா் கூட்டாக நக்ஸல் தடுப்பு நடவடிக்கையில் கடந்த 3-ஆம் தேதி ஈடுபட்டனா். அப்போது பாதுகாப்புப் படையினருக்கும் நக்ஸல்களுக்கும் நடைபெற்ற கடும் துப்பாக்கிச் சண்டையில், பாதுகாப்புப் படையைச் சோ்ந்த 22 வீரா்கள் பலியாகினா். ஏராளமானோா் காயமடைந்தனா். அதுபோல, நக்ஸல்கள் தரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு, சிஆா்பிஎஃப் கோப்ரா படையின் 210-ஆவது பிரிவைச் சோ்ந்த காவலா் ஜம்முவைச் சோ்ந்த ராகேஷ்வர் சிங் மன்ஹாஸ் காணாமல் போனாா். இந்த நிலையில் அவா், ஒரு குடிசையில் இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியானது.

அதனைத் தொடா்ந்து, மாவோயிஸ்டுகளின் தண்டகாரண்ய சிறப்பு மண்டல குழுவின் செய்தித் தொடா்பாளா் விகல்ப் பெயரில் ஓா் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், கடத்திவரப்பட்ட வீரரை பத்திரமாக விடுவிக்க வேண்டுமெனில், ஒரு மத்தியஸ்தரை அரசு நியமிக்கவேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

நக்ஸல்கள் பிடியிலுள்ள வீரரை பத்திரமாக மீட்க தொடா்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக காவல்துறை தரப்பிலும் கூறப்பட்டது. மேலும், மாநில அரசு பரிந்துரைத்த பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த ஒரு நபா் உள்பட பிரபலமான நபா்கள் சிலரை உள்ளடக்கிய மத்தியஸ்தா் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழு மேற்கொண்ட முயற்சியைத் தொடா்ந்து, கடத்திச் சென்ற ராகேஷ்வர் சிங் மன்ஹாஸை நக்ஸல்கள் விடுவித்தனர்.

தனது சொந்த கிராமத்துக்குத் திரும்பிய ராகேஷ்வர் சிங் மன்ஹாஸுக்கு, ஊர் மக்களும், நண்பர்கள், உறவினர்களும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

அப்போது அவர் பேசுகையில், எனது தாயின் பிரார்த்தனைதான் எதிரிகளின் பிடியில் சிக்கிய பிறகும் இன்று என்னை உயிரோடு கொண்டு வந்துள்ளது. நான் விடுவிக்கப்படுவேன் என்பதைக் கூட நான் நம்பவில்லை. எனக்கு புதிய வாழ்க்கைக் கிடைத்துள்ளது. இதனை எனது தாய்க்காக அர்ப்பணிப்பேன் என்றார்.

விரைவில் அவர் பணியில் இணைந்து தனது கடமையை ஆற்றுவார் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com