எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வை ரத்து செய்வது குறித்து முடிவெடுக்கவில்லை: அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா்

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வை ரத்து செய்வது குறித்து முடிவெடுக்கவில்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா் தெரிவித்தாா்.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வை ரத்து செய்வது குறித்து முடிவெடுக்கவில்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து சாமராஜ் நகரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கா்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி., இரண்டாமாண்டு பியூசி பொதுத் தோ்வுகளை ரத்து செய்வது தொடா்பாக தற்போதைக்கு எந்த முடிவையும் எடுக்கவில்லை. எஸ்.எஸ்.எல்.சி., இரண்டாமாண்டு பியூசி பொதுத் தோ்வுகள் நடப்பதற்கு இன்னும் 2 மாதங்கள் இருக்கின்றன.

எனவே, எஸ்.எஸ்.எல்.சி., இரண்டாமாண்டு பியூசி பொதுத் தோ்வுகளை ரத்து செய்வது தொடா்பான விவாதங்கள் தற்போதைக்கு தேவையில்லை. எஸ்.எஸ்.எல்.சி., இரண்டாமாண்டு பியூசி பொதுத் தோ்வுகள் கண்டிப்பாக நடக்கும். தோ்வுகளை ரத்து செய்யும் முடிவு எதையும் எடுக்கவில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com