ஒடிசாவில் 3 ஆயிரத்தைத் தாண்டியது ஒருநாள் பாதிப்பு: 4 பேர் பலி

ஒடிசாவில் அதிகரித்துவரும் கடந்த சில நாள்களாக ரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதன்படி ஒருநாள் பாதிப்பு 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 
ஒடிசாவில் 3 ஆயிரத்தைத் தாண்டியது ஒருநாள் பாதிப்பு
ஒடிசாவில் 3 ஆயிரத்தைத் தாண்டியது ஒருநாள் பாதிப்பு

ஒடிசாவில் அதிகரித்துவரும் கடந்த சில நாள்களாக ரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதன்படி ஒருநாள் பாதிப்பு 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், 

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,144 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளதையடுத்து, மொத்த பாதிப்பு 3,64,594 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், 4 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 1,942 ஆக உயர்ந்துள்ளது. புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் 1,823 பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலும், 1,321 உள்ளூரிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

வெள்ளிக்கிழமை நிலவரப்படி மாநிலத்தில் 37,245 சோதனைகள் மேற்கொண்ட நிலையில் இதுவரை 65 லட்சம் சோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com