ஒடிசாவில் அதிகரித்துவரும் கடந்த சில நாள்களாக ரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதன்படி ஒருநாள் பாதிப்பு 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,144 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளதையடுத்து, மொத்த பாதிப்பு 3,64,594 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், 4 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 1,942 ஆக உயர்ந்துள்ளது. புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் 1,823 பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலும், 1,321 உள்ளூரிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி மாநிலத்தில் 37,245 சோதனைகள் மேற்கொண்ட நிலையில் இதுவரை 65 லட்சம் சோதனைகள் செய்யப்பட்டுள்ளன.