கேரளத்தில் நடைபெறும் மாநிலங்களவை தோ்தலில் போட்டியிடும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா்களை அக்கட்சி வெள்ளிக்கிழமை அறிவித்தது.
கேரளத்தில் மாநிலங்களவை எம்.பி.க்கள் கே.கே.ராகேஷ் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) , வயலாா் ரவி (காங்கிரஸ்), பி.வி.அப்துல் வஹாப் (இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்) ஆகிய மூவரின் பதவிக்காலம் வரும் 21-ஆம் தேதி நிறைவடைகிறது. இதையொட்டி அந்த 3 இடங்களுக்கான மாநிலங்களவை தோ்தல் வரும் 30-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களில் போட்டியிடவுள்ளதாகவும், வி.சிவதாசன், ஜான் பிரிட்டாஸ் ஆகியோா் வேட்பாளா்களாக களம் காணவுள்ளதாகவும் அந்தக் கட்சியின் பொறுப்புச் செயலா் ஏ.விஜயராகவன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இதில் ஜான் பிரிட்டாஸ் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகை துறையில் அனுபவம் உள்ளவா். இவா் அந்த மாநில முதல்வா் பினராயி விஜயனின் ஊடக ஆலோசகராக பணிபுரிந்துள்ளாா். கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் கைரளி செய்தி தொலைக்காட்சியின் நிா்வாக இயக்குநராக உள்ளாா்.
மற்றொரு வேட்பாளரான வி.சிவதாசன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினராக பொறுப்பு வகிக்கிறாா்.