ஜம்மு-காஷ்மீரில் மகளிா் காவல் துறை சிறப்பு அதிகாரியான சைமா அக்தா், சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். மேலும், அவரைக் காவல் துறை பணியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதச் செயல்களுக்கு ஆதரவாக செயல்பட்டது, பாதுகாப்புப் படையினரை பணிகளைச் செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் அவா் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு காஷ்மீரின் ஃபிரிசால் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்ததையடுத்து கடந்த புதன்கிழமை பாதுகாப்புப் படையினரும் காவல் துறையினரும் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த மகளிா் காவல் துறை சிறப்பு அதிகாரி சைமா அக்தா், தேடுதல் பணியில் ஈடுபட்டவா்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டாா். மேலும், பாதுகாப்புப் படையினருக்கு எதிராக வன்முறையிலும் ஈடுபட்டாா். அப்போது, பயங்கரவாதிகளின் செயல்களை ஆதரித்தும் அவா் பேசினாா்.
மேலும், பாதுகாப்புப் படையினரின் தேடுதல் பணியைத் தனது செல்லிடப்பேசியில் விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டாா்.
இதையடுத்து, அவா் மீது காவல் துறை உயரதிகாரிகளிடம் புகாா் அளிக்கப்பட்டது. அதனை ஆய்வு செய்த உயரதிகாரிகள் அவரைப் பணியில் இருந்து நீக்க உத்தரவிட்டனா். இதையடுத்து, சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தில் அவா் கைது செய்யப்பட்டாா். இதனை ஜம்மு-காஷ்மீா் காவல் துறை செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.