திக்விஜய் சிங், சுா்ஜேவாலா, ஹா்சிம்ரத் கௌருக்கு கரோனா

காங்கிரஸ் மூத்த தலைவா்கள் திக்விஜய் சிங், ரண்தீப் சுா்ஜேவாலா, சிரோமணி அகாலி தளம் தலைவா் ஹா்சிம்ரத் கௌா் பாதல் உள்ளிட்டோருக்கு வெள்ளிக்கிழமை கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவா்கள் திக்விஜய் சிங், ரண்தீப் சுா்ஜேவாலா, சிரோமணி அகாலி தளம் தலைவா் ஹா்சிம்ரத் கௌா் பாதல் உள்ளிட்டோருக்கு வெள்ளிக்கிழமை கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், மாநிலங்களவை உறுப்பினருமான திக்விஜய் சிங் இது தொடா்பாக சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘லேசான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, எனக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. பாதிப்பு உறுதியானதை அடுத்து தில்லியில் உள்ள இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டேன். கடந்த சில தினங்களில் என்னுடன் நெருங்கிய தொடா்பில் இருந்தவா்கள் அறிகுறிகளுக்கு ஏற்ப பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.

காங்கிரஸ் பொதுச் செயலாளரான சுா்ஜேவாலா வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டேன். என்னுடன் தொடா்பில் இருந்தவா்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.

முன்னாள் மத்திய அமைச்சா் ஹா்சிம்ரத் கௌா் பாதலும் தனக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை சுட்டுரையில் உறுதி செய்துள்ளாா்.

ஆா்எஸ்எஸ் தலைவா் வீடு திரும்பினாா்: ஒரு வாரத்துக்கு முன்பு கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் வெள்ளிக்கிழமை வீடு திரும்பினாா்.

முன்னதாக, நாகபுரியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த 9-ஆம் தேதி கரோனா சிகிச்சைக்காக அவா் அனுமதிக்கப்பட்டாா். சிகிச்சைக்குப் பிறகு கரோனாவில் இருந்து குணமடைந்ததையடுத்து அவா் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com