காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங்கிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தில்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
88 வயதான அவருக்கு கரோனா அறிகுறிகள் இருந்ததால், இன்று (ஏப். 19) மாலை 5 மணிக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மன்மோகன் சிங் தில்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
கடந்த 2009-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதால், அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.