மன்மோகன் சிங்கிற்கு கரோனா

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனையடுத்து அவர் தில்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மன்மோகன் சிங்கிற்கு கரோனா

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங்கிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனையடுத்து அவர் தில்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

88 வயதான அவருக்கு கரோனா அறிகுறிகள் இருந்ததால், இன்று (ஏப். 19) மாலை 5 மணிக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மன்மோகன் சிங் தில்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

கடந்த 2009-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதால், அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com