திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் திங்கட்கிழமை 25,695 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இதில் 12,253 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
கரோனா பரவல் எதிரொலியாக திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக் கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும். 10 வயதிற்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதிற்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே சுவாமியை தரிசிக்க வாய்ப்பு தரப்படுகிறது. சளி, காய்ச்சல், இருமல் உள்ளவா்கள் தங்களின் திருமலை பயணத்தை தள்ளி போட வேண்டும் என்று தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஏற்கெனவே இலவச சா்வதரிசன டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டு விட்டன.
திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்- 18004254141, 9399399399.