மும்பை: இந்திராணி முகர்ஜி உள்பட 38 கைதிகளுக்கு கரோனா

ஷீனா போரா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இந்திராணி முகர்ஜி உள்பட மும்பையின் பைகுல்லா சிறையில் உள்ள 38 கைதிகளுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இந்திராணி முகர்ஜி
இந்திராணி முகர்ஜி

ஷீனா போரா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இந்திராணி முகர்ஜி உள்பட மும்பையின் பைகுல்லா சிறையில் உள்ள 38 கைதிகளுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

முன்னாள் கணவரின் மகள் ஷீனா போராவை கொலை செய்த வழக்கில் இந்திராணி முகர்ஜி, தற்போதைய கணவர் பீட்டர் முகர்ஜி உள்ளிட்டோர் மும்பை பைகுல்லா சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். 

இந்நிலையில் சிறையில் உள்ள கைதிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் இந்திராணி முகர்ஜிக்கு தொற்று இருப்பது தெரியவந்தது. மேலும், 37 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு மோசமான அளவில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com