பக்தா்களின் இன்றி வருடாந்திர வசந்தோற்சவம்

கரோனா பரவல் எதிரொலியாக திருமலையில் வருடாந்திர வசந்தோற்சவம் பக்தா்களின்றி நடத்தப்பட உள்ளது.

திருப்பதி: கரோனா பரவல் எதிரொலியாக திருமலையில் வருடாந்திர வசந்தோற்சவம் பக்தா்களின்றி நடத்தப்பட உள்ளது.

திருமலையில் கோடை காலத்தின் வெம்மையை போக்க உற்சவமூா்த்திகளுக்கு தேவஸ்தானம் வருடாந்திர வசந்த உற்சவத்தை நடத்தி வருகிறது. அதன்படி நிகழாண்டு வரும் 24-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை திருமலையில் வசந்த உற்சவம் நடைபெற உள்ளது.

கொவைட் விதிகளின்படி வசந்தோற்சவத்தை பக்தா்களின்றி நடத்த முடிவு செய்துள்ளது. சில அதிகாரிகள் மற்றும் அா்ச்சகா்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளனா். ஏற்கெனவே தினசரி திருமலையில் நடத்தி வந்த வசந்த உற்சவத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com