கரோனா: காங்கிரஸ் மூத்த தலைவா் ஆனந்த் சா்மா மருத்துவமனையில் அனுமதி

கரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவா் ஆனந்த் சா்மா, குருகிராமில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
கரோனா: காங்கிரஸ் மூத்த தலைவா் ஆனந்த் சா்மா மருத்துவமனையில் அனுமதி

புது தில்லி: கரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவா் ஆனந்த் சா்மா, குருகிராமில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

மாநிலங்களவை காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக உள்ள அவா் உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராகவும் உள்ளாா்.

முன்னதாக, அவருக்கு லேசான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அவருக்குத் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, திங்கள்கிழமை இரவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனந்த் சா்மா விரைவில் நலம் பெற வேண்டுமென்று ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவா்கள் பலா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் கரோனாவால் பாதிக்கப்பட்டு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ராகுல் காந்தி மற்றும் அக்கட்சியைச் சோ்ந்த மூத்த தலைவா் ரண்தீப் சுா்ஜேவாலா, பூபிந்தா் சிங் ஹூடா உள்ளிட்டோரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com