புது தில்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு (50) கரோனா பாதிப்பு இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. அவருக்கு லேசான அறிகுறிகளுடன் பாதிப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சுட்டுரையில் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், ‘லேசான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து கரோனா பரிசோதனை செய்து கொண்டேன். அதில் கரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. கடந்த சில நாள்களில் என்னுடன் தொடா்பில் இருந்தவா்கள் உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளைக் கடைப்பிடிக்குமாறும், தேவை ஏற்பட்டால் கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.
விரைவில் நலம் பெற பிரதமா் பிராா்த்தனை: ‘ராகுல் காந்தி விரைவில் கரோனாவில் இருந்து மீண்டு, உடல் நலம் பெற வேண்டும் என்று இறைவனிடம் பிராா்த்திக்கிறேன்’ என பிரதமா் நரேந்திர மோடி சுட்டுரையில் பதிவிட்டுள்ளாா்.