லூதியானா மருத்துவமனையில் கரோனா நோயாளி தூக்கிட்டுத் தற்கொலை

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் கரோனா நோயாளி ஒருவர் மருத்துவமனையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லூதியானா மருத்துவமனையில் கரோனா நோயாளி தூக்கிட்டுத் தற்கொலை

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் கரோனா நோயாளி ஒருவர் மருத்துவமனையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் லூதியானா சிவில் மருத்துவமனையில் 35 வயது கரோனா நோயாளி ஒருவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் திடீரென மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

நேற்று முன்தினம் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை 5 மணிக்கு அவருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒரு மணி நேரம் கழித்து மாலை 6 மணி அளவில் மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் இருந்ததை அங்குள்ள மருத்துவ ஊழியர்கள் அறிந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததாக உதவி காவல் ஆணையர் வார்யம் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com