குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கரோனா தடுப்பூசி முதல் டோஸை இன்று செலுத்திக் கொண்டார்.
நாட்டில் கரோனா பரவல் நாளுக்குநாள் பன்மடங்கு அதிகரித்து வருகிறது. கரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்தவும், கரோனா தடுப்பூசி இயக்கத்தை தீவிரப்படுத்தவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கரோனா தடுப்பூசி முதல் டோஸை இன்று செலுத்திக் கொண்டார். காந்தி நகர் மருத்துவமனையில் அவர் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.