பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ராம நவமி வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், கரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
"நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய ராம நவமி வாழ்த்துகள். ஸ்ரீராமரின் அபரிமிதமான இரக்கம் நாட்டு மக்கள் மீது என்றென்றும் தொடரட்டும். ராமா நீண்ட காலம் வாழ்க!" என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், 'ராம நவமி தினத்தையொட்டி இன்று அனைவரும் ராமரின் வழிகளை பின்பற்றி நடக்க வேண்டும். இந்த கரோனா நெருக்கடியில், வைரஸ் தொற்றைத் தவிர்க்க கரோனா நெறிமுறைகளை மக்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார்.