மகாராஷ்டிரத்தில் உள்ள நாசிக் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் நிரப்பும்போது வாயுக்கசிவு ஏற்பட்டதில் 11 பேர் உயிரிழந்தனர்.
ஜாகிர் உசேன் மருத்துவமனையில் டேங்கரில் இருந்து ஆக்ஸிஜன் மாற்றும்போது இந்த விபத்து ஏற்பட்டது.
ஆக்ஸிஜன் வாயுவைக் கட்டுப்படுத்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
டேங்கரில் ஏற்பட்ட பழுது காரணமாக ஆக்ஸிஜன் வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.