திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் திங்கள்கிழமை ரூ.3.21 கோடி உண்டியல் காணிக்கை வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
சுவாமியை தரிசிக்க வரும் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயில் உண்டியலில் செலுத்தி வருகின்றனா். காணிக்கைகளை கணக்கிட்டதில் தேவஸ்தானத்திற்கு ரூ3.21 கோடி வருவாய் கிடைத்தாக அதிகாரிகள் தெரிவித்தனா்.