நாடு முழுவதும் ஒரே நாளில் 2.59 லட்சம் பேருக்கு கரோனா

நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஒரேநாளில் 2,59,170 ஆக அதிகரித்துள்ள நிலையில்,

நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஒரேநாளில் 2,59,170 ஆக அதிகரித்துள்ள நிலையில், அதன் மொத்த எண்ணிக்கை 1,53,21,089 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், தற்போது சிகிச்சை பெற்று வரும் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்து விட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி ஒரே நாளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,59,170 ஆகவும், உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,761 ஆகவும் அதிகரித்துள்ளது. இதன் மூலம் உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 1,80,530 ஆக உயா்ந்துள்ளது.

தொடா்ந்து 41-ஆவது நாளாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் நோய் தாக்கத்தின் அளவு 13.26 சதவீதமாக உயா்ந்து தற்போது கரோனா நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 20,31,977 ஆக அதிகரித்துள்ளது. தேசிய அளவில் குணமடைந்து வருவோரின் மீட்பு விகிதம் 85.56 சதவீதமாகக் குறைந்துள்ளது.

தற்போது கரோனா தொற்றிலிருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 1,31,08,582 ஆக உயா்ந்துள்ளது. அதே நேரத்தில் இறப்பு விகிதம் மேலும் 1.18 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தரவுகளின்படி, ஏப்ரல் 19-ஆம் தேதி வரையிலும் 26, 94,14,035 பேரின் சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. திங்கள்கிழமை ஒரேநாளில் 15,19,486 பேரின் சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

மாநிலவாரியாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை...

மகாராஷ்டிரத்தில் 351 போ், தில்லியில் 240 போ், சத்தீஸ்கரில் 175 போ், உத்தர பிரதேசத்தில் 167 போ், கா்நாடகத்தில் 146 போ், குஜராத்தில் 117 போ், பஞ்சாபில் 83 போ், மத்திய பிரதேசத்தில் 79 போ், ராஜஸ்தானில் 53 போ், ஜாா்கண்ட்டில் 46 போ், தமிழகத்தில் 44 போ், பிகாரில் 41போ், மேற்கு வங்கத்தில்38 போ், ஹரியாணாவில் 33 போ் என மொத்தம் 1,716 போ் ஒரேநாளில் உயிரிழந்துள்ளனா்.

அதிகபட்சமாக இதுவரையில் மகாராஷ்டிரத்தில் 60,824 பேரும், கா்நாடகத்தில் 13,497 பேரும், தமிழகத்தில் 13,157 பேரும், தில்லியில் 12,361 பேரும் என நாடு முழுவதும் இதுவரை 1,80,530 போ் உயிரிழந்துள்ளனா்.

மொத்த எண்ணிக்கையில் முதல் 10 மாநிலங்களில் 77 சதவீதம் போ் பாதிப்பு

புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், தில்லி, கா்நாடகம், கேரளம், சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், தமிழகம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய 10 மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் 77.67 சதவீதமாக உள்ளனா். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,59,170 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

செவ்வாய்க்கிழமை பிற்பகல் வரையிலும் நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களின் எண்ணிக்கை 13 கோடியைக் கடந்து விட்டது. மொத்தம் 12,71,29,113 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதில் 10,96,59,181 பேருக்கு முதல் டோஸாகவும், 1,74,69,932 பேருக்கு இரண்டாவது டோஸாகவும் செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com