மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மகனின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சீதாராம் யெச்சூரியின் மகன் ஆஷிஷ் யெச்சூரி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தில்லி அருகேயுள்ள குருகிராம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (ஏப். 22) காலை அவர் உயிரிழந்தார். ஆஷிஷ் பத்திரிகையாளராகவும் பணியாற்றி வந்தவர்.
அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது,
மகன் ஆஷிஷை இழந்து தவிக்கும் சீதாராம் யெச்சூரிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். அவரது ஆன்மா சாந்தியடையும் வகையில் ஓம் சாந்தி குறிப்பிட்டுள்ளார்.