உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த போப்டேவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று காலை என்.வி.ரமணா பொறுப்பேற்றார்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ரமணா, ஆந்திர உயர்நீதிமன்றம், மத்திய மற்றும் மாநில நிர்வாக தீர்ப்பாயங்களில் பணியாற்றியுள்ளார். மேலும், கடந்த 2000-ம் ஆண்டில் ஆந்திர உயர்நீதிமன்றத்தின் நீதியாகவும் நியமிக்கப்பட்டார்.
இவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். அடுத்தாண்டு ஆகஸ்டு 26-ம் தேதி வரை ரமணா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகச் செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.