தேசிய கல்விக் கொள்கை மொழிபெயர்ப்பில் தமிழ் புறக்கணிப்பு

புதிய தேசிய கல்விக் கொள்கையின் மாநில மொழிபெயர்ப்பை மத்திய அரசு இன்று வெளியிட்டிருக்கும் நிலையில், அதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கை மொழிபெயர்ப்பில் தமிழ் புறக்கணிப்பு
தேசிய கல்விக் கொள்கை மொழிபெயர்ப்பில் தமிழ் புறக்கணிப்பு


புது தில்லி: புதிய தேசிய கல்விக் கொள்கையின் மாநில மொழிபெயர்ப்புகளை மத்திய அரசு இன்று வெளியிட்டிருக்கும் நிலையில், அதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது.

அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம் உள்ளிட்ட 17 மொழிகளில் புதிய தேசிய கல்விக் கொள்கை மொழிபெயர்க்கப்பட்டு வெளியிட்டிப்பட்டிருக்கும் நிலையில், தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பு இடம்பெறவில்லை.

இந்தியாவில் நடைமுறையில் இருந்த 1986-ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட 34 ஆண்டுகள் பழைமையான தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக, மத்திய அரசு அறிமுகம் செய்த புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு, மத்திய அமைச்சரவை கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. அதன் மூலம் புதிய கல்விக் கொள்கை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த புதிய கல்விக் கொள்கைக்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களும், கல்வியாளா்களும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். பல மாநிலங்கள், இந்த புதிய கல்விக் கொள்கை குறித்து ஆய்வு செய்ய குழுக்களை அமைத்துள்ளன.

இந்த நிலையில், புதிய தேசியக் கொள்கை மாநில மொழிகளில் மொழிபெயர்த்து மத்திய அரசு பதிவேற்றம் செய்துள்ளது. ஆனால், புதிய தேசியக் கொள்கை  தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com