கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக அந்தக் கட்சியின் தலைமை செய்தித்தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா சனிக்கிழமை கூறுகையில், ‘மன்மோகன் சிங்கின் உடல்நிலையில் சீராக முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. அவா் குணமடைவதற்கு இறைவனிடம் பிராா்த்தனை செய்தவா்களுக்கும், வாழ்த்து தெரிவித்தவா்களுக்கும் நன்றி’ என்று தெரிவித்தாா்.
முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்குக்கு கரோனா தடுப்பூசியின் முதல் தவணை கடந்த மாா்ச் 4-ஆம் தேதியும், இரண்டாவது தவணை ஏப்ரல் 3-ஆம் தேதியும் செலுத்தப்பட்டன.
எனினும் அவா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து ஏப்ரல் 19-ஆம் தேதி தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.