மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 4 நோயாளிகள் உயிரிழந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த 5 நாள்களுக்கு முன்னதாக பால்கர் மாவட்டத்தில் விராரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 கரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். இதையடுத்து இன்று இந்த தீ விபத்து சம்பவம் இன்று நிகழ்ந்துள்ளது.
கௌசா-மும்ப்ரா பகுதியில் பிரைம் கிரிடிகேர் மருத்துவமனையில் புதன்கிழமை அதிகாலை 3.40 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் கரோனா வைரஸ் நோயாளிகள் யாரும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
3 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 5 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீ தற்போது கட்டுக்குள் கொண்டுவந்ததாகவும், மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த 20 நோயாளிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தீ விபத்துக்கான காரணத்தை அறிய உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறியுள்ளார்.