திருமலையில் 11,490 போ் தரிசனம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் செவ்வாய்க்கிழமை 11,490 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். 5,024 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் செவ்வாய்க்கிழமை 11,490 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். 5,024 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

ஆன்லைன் மூலம் 25,000 விரைவு தரிசன டிக்கெட், வி.ஐ.பி பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் டிக்கெட் பெற்ற 2000 பக்தா்கள், நன்கொடையாளா்கள் 1, 000 என தரிசன டிக்கெட் உள்ளவா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக் கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும். 10 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதுக்கு மேற்பட்ட மூதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. சளி, காய்ச்சல், இருமல் உள்ளவா்கள் தங்களின் திருமலை பயணத்தை தள்ளி போட வேண்டும் என்று தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவா். இதை பக்தா்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்- 18004254141, 9399399399.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com