அசாம் மாநிலம் தேஜ்பூரில் வியாழக்கிழமை ரிக்டர் 3.6 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வியாழக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் அசாம் மாநிலம் தேஜ்பூரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
பூமிக்கடியில் 27 கி.மீ ஆழத்தில் உணரப்பட்ட ரிக்டர் அளவில் 3.6ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
முன்னதாக புதன்கிழமை அசாமில் ரிக்டர் 6.4 அளவில் வலிமையான நிலநடுக்கம் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.