14.7 கோடி தடுப்பூசி: இந்தியாவில் கரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 14.78 கோடியை கடந்துள்ளது.
புதன்கிழமை காலை 7 மணி வரை, 21,18,435 முகாம்களில் 14,78,27,367 பயனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 25 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. 102-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் 25,56,182 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.