கேரளத்தில் புதிதாக 38,607 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி செய்தியாளர்களிடம் முதல்வர் பினராயி விஜயன் கூறியது:
"மாநிலத்தில் புதிதாக 38,607 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 48 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியிருப்பது இன்று கண்டறியப்பட்டுள்ளது. தினசரி கரோனா பாதிப்பில் இதுவே புதிய உச்சம். மொத்த பலி எண்ணிக்கை 5,259 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை மொத்தம் 12,44,301 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்" என்றார் அவர்.