மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் புதிதாக 62,919 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 62,919 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 6,62,640 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர்.
கரோனாவுக்கு இன்று 828 பேர் பலியாகியுள்ளனர். கரோனாவிலிருந்து இன்று 69,710 பேர் குணமடைந்தனர். இதுவரை 38,68,976 பேர் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். 41,93,686 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.