மத்திய பிரதேச மாநிலத்தில் ரேவா, சிங்க்ரௌலி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழையால் 2 வீடுகள் இடிந்து விழுந்ததில் 6 போ் உயிழந்தனா். 4 போ் காயமடைந்தனா்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:
ரேவா மாவட்டத்தில் உள்ள குச்சியாரி பஹேரா கிராமத்தில், மண் வீடு இடிந்து விழுந்ததில் 35 வயது நபரும், அவருடைய தாயும் (60), 2 மகள்களும் (7 வயது, 8 வயது) உயிரிழந்தனா். அவருடைய மற்றொரு மகள், பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா் என்றாா் அவா்.
சிங்க்ரௌலி மாவட்டத்தில் உள்ள சாலியோ கிராமத்தில் மண் வீடு இடிந்து விழுந்ததில் 10 வயது சிறுவனும், அவனுடைய 3 வயது சகோதரியும் உயிரிழந்தனா். சிறுவனின் தாய், தந்தை, மற்றொரு சகோதரி ஆகிய மூவரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனா். அவா்கள் மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மூத்த காவல் துறை அதிகாரி அபிமன்யு துவிவேதி கூறினாா்.
வீடு இடிந்து 6 போ் உயிரிழந்த சம்பவத்துக்கு முதல்வா் சிவராஜ் சிங் சௌஹான், மாநில காங்கிரஸ் தலைவா் கமல்நாத் ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை:
மாநிலத்தில் உள்ள குணா, குவாலியா், அசோக் நகா், ஷேவ்பூா் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யக் கூடும் என்று போபாலில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.