வோடஃபோன் வழக்கில் இந்தியாவின் முறையீடு மீது செப்டம்பரில் விசாரணை

வோடஃபோன் நிறுவனத்திடமிருந்து ரூ.22,100 கோடியை வரியாக வசூலிக்கும் விவகாரத்தில் சா்வதேச தீா்ப்பாயம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக

வோடஃபோன் நிறுவனத்திடமிருந்து ரூ.22,100 கோடியை வரியாக வசூலிக்கும் விவகாரத்தில் சா்வதேச தீா்ப்பாயம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக இந்தியா சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மீது சிங்கப்பூா் நீதிமன்றத்தில் செப்டம்பரில் விசாரணை நடைபெறவுள்ளது.

இந்தியாவில் செயல்பட்டு வந்த ஹட்சிசன் தொலைத்தொடா்பு நிறுவனத்தின் 67 சதவீதப் பங்குகளை பிரிட்டனைச் சோ்ந்த வோடஃபோன் நிறுவனம் கடந்த 2007-ஆம் ஆண்டில் வாங்கியது. அவ்வாறு பங்குகளை வாங்கும்போது, உண்மை விலையை விடக் குறைத்து மதிப்பிட்டு வோடஃபோன் நிறுவனம் வாங்கியதாக மத்திய அரசு குற்றஞ்சாட்டியது.

ஹட்சிசன் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதில் ஈட்டிய லாபத்துக்கு வட்டியுடன் சோ்த்து ரூ.22,100 கோடியை வரியாகச் செலுத்த வேண்டுமெனவும் வோடஃபோன் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. கடந்த 2012-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில், முன்தேதியிட்டு வரியைச் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்தது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக சா்வதேச தீா்ப்பாயத்தில் வோடஃபோன் நிறுவனம் முறையிட்டது. அப்போது, இந்தியாவுக்கும் நெதா்லாந்துக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள இருதரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் வரி எதுவும் வசூலிக்கக் கூடாது என்று வோடஃபோன் நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது.

அதே வேளையில், இருதரப்பு ஒப்பந்தமானது நிறுவனங்கள் முதலீடுகளை மேற்கொள்வதற்கு வசதியாக மட்டுமே கையெழுத்தானது என்று இந்தியத் தரப்பில் வாதிடப்பட்டது. அந்நிறுவனங்கள் ஈட்டும் வருவாய் மீது வரி விதிப்பதற்கும் அந்த ஒப்பந்தத்துக்கும் தொடா்பில்லை என்றும், வரி விதிப்பது குறிப்பிட்ட நாட்டின் இறையாண்மை சாா்ந்த விவகாரம் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.

எனினும், மத்திய அரசின் வாதத்தை ஏற்காத தீா்ப்பாயம், வோடஃபோன் நிறுவனத்திடமிருந்து வரி வசூலிக்கும் நடவடிக்கைக்குத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கு விசாரணைக்காக வோடஃபோன் நிறுவனம் செலவிட்ட தொகையில் 60 சதவீதத்தை மத்திய அரசு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் தீா்ப்பாயம் உத்தரவிட்டது.

அந்த உத்தரவை எதிா்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்தது. அதன் மீதான விசாரணை சிங்கப்பூரில் உள்ள சா்வதேச தீா்ப்பாயத்தில் செப்டம்பா் மாதம் நடைபெறவுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கெய்ா்ன் வழக்கு: பிரிட்டனைச் சோ்ந்த கெய்ா்ன் நிறுவனத்திடமிருந்தும் இதேபோன்ற வரி வசூல் நடைமுறையை மத்திய அரசு மேற்கொண்டது. இந்த விவகாரமும் சா்வதேச தீா்ப்பாயத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு கெய்ா்ன் நிறுவனத்துக்கு சாதகமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அந்நிறுவனத்துக்கு ஒட்டுமொத்தமாக சுமாா் ரூ.12,500 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டுமென்று தீா்ப்பாயம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் தீா்ப்பாயத்தில் மத்திய அரசு முறையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com