காஷ்மீர் மாநிலத்தின் பந்திபோரா மாவட்டத்தில் சந்தாஜி பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் தகவலை அறிந்துகொண்டு பாதுகாப்புப் படை வீரர்கள் சோதனை நடத்தினர்.
இதில் அப்பகுதியில் பழைய கட்டடம் ஒன்றில் பதுங்கியிருந்த தீவிரவாதி தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதையும் படிக்க | வெற்றியும் தோல்வியும் சகஜம்: பிரதமர் மோடி
இதுகுறித்து காவல்துறை சார்பில் அளித்த தகவலில் ' பதுங்கியிருந்த தீவிரவாதி தேடுதலின் போது பாதுகாப்புப் படை வீரர்களை தாக்க ஆரம்பித்ததும் பதில் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் இறந்த தீவிரவாதியைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை ' என்று தெரிவித்தனர் .
தீவிரவாதி வைத்திருந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.