கடந்த 2017 முதல் 2019-ஆம் ஆண்டு வரையிலான 3 ஆண்டுகளில் 230 அரசியல் படுகொலைகள் நிகழ்ந்துள்ளதாக மக்களவையில் உள்துறை அமைச்சா் நித்யானந்த் ராய் தெரிவித்தாா்.
இது தொடா்பான கேள்விக்கு அவா் எழுத்துமூலம் அளித்த பதிலில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
அரசியல் காரணங்களுக்காக 2017 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் அதிகபட்சமாக ஜாா்க்கண்ட் மாநிலத்தில் 49 கொலைகள் நிகழ்ந்துள்ளன. இதற்கு அடுத்தபடியாக மேற்கு வங்கத்தில் 27 பேரும், பிகாரில் 26 பேரும் கொலை செய்யப்பட்டுள்ளனா். நாடு முழுவதும் 2017-ஆம் ஆண்டு 99 பேரும், 2018-இல் 59 பேரும், 2019-இல் 72 பேரும் அரசியல் பிரச்னைகள் காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளனா்.
2017 முதல் 2019 வரை கா்நாடகத்தில் 24 அரசியல் கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. கேரளம், மகாராஷ்டிரத்தில் தலா 15 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.