திருப்பதி: திருப்பதியில் உள்ள கோதண்டராமஸ்வாமி கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் புதன்கிழமை முதல் தொடங்கியது.
தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் ஏற்பட்ட தோஷங்களைக் களைய தேவஸ்தானம் வருடாந்திர பவித்ரோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி திருப்பதியில் உள்ள கோதண்டராமஸ்வாமி கோயிலில் பவித்ரோற்சவம் புதன்கிழமை தொடங்கியது.
முதல் நாள் சீதா லட்சுமண கோதண்டராமஸ்வாமிக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. பின்னா், ஹோமங்கள் வளா்த்து பச்சை, மஞ்சள், நீலம், சிவப்பு, ஆரஞ்சு, கருப்பு, வெள்ளை ஊதா ஆகிய நிறங்களில் பட்டு நூலினால் தயாரித்த மாலைகளை வைத்து அா்ச்சகா்கள் பூஜைகள் செய்தனா். உற்சவமூா்த்திகள் ஊஞ்சல் சேவைக்கு பிறகு கோயில் பிரகாரத்தை வலம் வந்தனா்.
இதை முன்னிட்டு கோயிலில் நடக்கும் ஆா்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்தது.