மகாராஷ்டிர சாலைகளை சீரமைக்க ரூ. 100 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர்

தொடர் மழையால் சேதமடைந்த மகாராஷ்டிர மாநிலத்தின் முக்கிய சாலைகளை சீரமைக்க ரூ. 100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
நிதின் கட்கரி (கோப்புப்படம்)
நிதின் கட்கரி (கோப்புப்படம்)

தொடர் மழையால் சேதமடைந்த மகாராஷ்டிர மாநிலத்தின் முக்கிய சாலைகளை சீரமைக்க ரூ. 100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு பருவமழைக் காரணமாக கடந்த மாதம் மூதல் மகாராஷ்டிர மாநிலத்தில் கனமழை பெய்து வருகின்றது. இதனால், அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு முக்கிய சாலைகள் சேதமடைந்துள்ளன.

இதுகுறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்ட சுட்டுரை பதிவில்,

“கொங்கன் மற்றும் மேற்கு மகாராஷ்டிர பகுதிகளில் பெய்த மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தற்காலிக சீரமைப்பிற்கு ரூ. 52 கோடியும், நிரந்தர சீரமைப்பிற்கு ரூ. 48 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com