நாடு முழுவதும் 49.5 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தி புதிய சாதனையை எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 57,97,808 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து, மொத்தம் 49,53,27,595 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ஆக்கத்திற்கல்ல அணு ஆயுதங்கள், அழிவிற்கே!
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது | முதல் தவணை - 16,97,29,527 இரண்டாம் தவணை - 1,08,07,866 |
45 - 59 வயது | முதல் தவணை - 10,99,20,377 இரண்டாம் தவணை - 4,15,01,902 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 7,76,34,057 இரண்டாம் தவணை - 3,78,53,585 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,24,101 இரண்டாம் தவணை - 79,35,738 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,80,22,988 இரண்டாம் தவணை - 1,15,97,454 |
மொத்தம் | 49,53,27,595 |