மத்திய பாஜக அரசை வீழ்த்த மம்தா பானர்ஜி தலைமையில் ஒர் அணி உருவாகிவருவதாக அசாம் எம்எல்ஏ அகில் கோகோய் தெரிவித்துள்ளார்.
மத்தியில் ஆட்சி நடத்திவரும் பாஜகவை வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் வீழ்த்த மம்தா பானர்ஜி தலைமையிலான பிராந்திய கட்சிகளின் கூட்டணி உருவாகிவருவதாக அசாம் எம்எல்ஏ அகில் கோகோய் தெரிவித்துள்ளார்.
சுயேட்சை எம்எல்ஏவாக உள்ள தன்னை மம்தா பானர்ஜி அவரது கட்சியில் இணைய அழைப்பு விடுத்துள்ளதாகவும் அகில் கோகோய் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், "பிராந்திய கட்சிகள் அடங்கிய கூட்டணியை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளோம். 2024ஆம் ஆண்டு தேர்தலில் பிரதமர் மோடியை ஆட்சியிலிருந்து அகற்ற மம்தா பானர்ஜியை தலைவராக முன்னிருத்துகிறோம்.
இதையும் படிக்க | ராகுல் காந்தியின் ட்விட்டர் பக்கம் நிறுத்தப்பட்டதற்கு காரணம் என்ன?
அவருடைய கட்சியுடன் என்னுடைய ராய்ஜோர் தள கட்சியை இணைத்தால் திரிணமுல் காங்கிரஸ் அசாம் மாநில தலைவர் பதவியை அளிப்பதாக மம்தா உறுதி அளித்துள்ளார். இதுகுறித்த முடிவு கட்சியின் செயற்குழுவில் எடுக்கப்படும். திரிணாமுல் காங்கிரஸ், ராய்ஜோர் தள கட்சிகளுக்கிடையே மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது" என்றார்.