மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,508 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 5,508 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 63,53,328 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 4,895 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 151 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இதையும் படிக்க | இனி வாட்ஸ் அப்பில் கரோனா தடுப்பூசி சான்றிதழ்
இதுவரை மொத்தம் 61,44,388 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 1,33,996 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 71,510 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அங்கு குணமடைவோர் விகிதம் 96.71 சதவிகிதமாக உள்ளது. இறப்பு விகிதம் 2.1 சதவிகிதமாக உள்ளது.