இந்தியா
ரூ. 2 லட்சம் கோடி கடன் சுமையை விட்டுச்சென்றது சந்திரபாபு நாயுடு அரசு: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசு ரூ. 2 லட்சம் கோடிக்கும் மேல் கடன் சுமையுடன் மாநிலத்தை விட்டுச்சென்றதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மூத்த தலைவர் விஜயசாய் ரெட்டி திங்கள்கிழமை குற்றம்சாட்டினார்
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசு ரூ. 2 லட்சம் கோடிக்கும் மேல் கடன் சுமையுடன் மாநிலத்தை விட்டுச்சென்றதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் வி. விஜயசாய் ரெட்டி திங்கள்கிழமை குற்றம்சாட்டினார்.
இதையும் படிக்க | 'தமிழக அரசு ஒரு நாளைக்கு ரூ.87.31 கோடி வட்டி செலுத்துகிறது'
இதுகுறித்து விஜயசாய் ரெட்டி மேலும் தெரிவித்தது:
"சந்திரபாபு நாயுடு அரசு ரூ. 2 லட்சம் கோடிக்கும் மேலான கடன் சுமையுடன் மாநிலத்தை விட்டுச்சென்றது. ஆந்திரத்தின் கடன் ரூ. 3.7 லட்சம் கோடி.
இதுவே உத்தரப் பிரதேசத்தில் ரூ. 6 லட்சம் கோடி, மகாராஷ்டிரத்தில் ரூ. 5 லட்சம் கோடி, தமிழகத்தில் ரூ. 4.8 லட்சம் கோடி, தெலங்கானாவில் ரூ. 3.2 லட்சம் கோடி, கேரளத்தில் ரூ. 3.2 லட்சம் கோடி கடன் உள்ளன."