தில்லியில் புதிதாக 52 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 65,123 பேர் பரிசோதிக்கப்பட்டதில் 52 பேருக்கு மட்டுமே நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 0.08 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.
இதையும் படிக்க | மோடி ஏன் பேச மறுக்கிறார்? ப.சிதம்பரம் கேள்வி
மேலும் 45 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் மட்டுமே நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இதன்மூலம், தில்லியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,36,852 ஆக உயர்ந்துள்ளது. இதில் 14,11,280 பேர் குணமடைந்துள்ளனர். 25,068 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 504 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.