ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, டெல்டா பிளஸ், கப்பா ஆகிய ஆறு வகை மாற்றமடைந்த கரோனா வைரஸ்களை கண்காணித்து வருவதாக தேசிய நோய்கள் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய அம்மையத்தின் இயக்குநர் எஸ்.கே.சிங், மாற்றமடைந்த கரோனா வைரஸ்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
வெளிநாடுகளிலிருந்து பரவும் தன்மை மற்றும் உள்நாட்டிலேயே பரவுவது என்ற இரு முறைகளில் டெல்டா வகை கரோனாவை கண்காணித்து வருகிறோம்.
மேலும், புதியவகை கரோனா பரவுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகக் கூறினார்.